ஒரு போயடிக் ரொமாண்டிக் ஸ்டோரின்னு காலேஜ் பசங்களெல்லாம் சொன்னதைக் கேட்டு நேத்து செகண்ட் ஷோ போயிருந்தேன்! சும்மா சொல்லக் கூடாது! காலேஜ் பசங்களெல்லாம் ரொம்பவே சிலாகிச்சித்தான் சொல்லிட்டிருந்தாங்க! அதுவும் ரெண்டு தடவை பார்த்தேன் மூணு தடவை பார்த்தேன்னு வேற என்னோட ஆர்வத்தீயை அதிகமாக்கி வேற விட்டிருந்தாங்க!
படம் போட்டபிறகு பார்த்தா டைட்டிலே அமர்க்களமா இருந்தது! டைட்டிலே கண்ணுக்கு அவ்ளோ அழகு! ஃபோட்டோ கிராஃபி அமர்க்களம்! லொக்கேஷன்ஸும் அருமை! போயடிக்கான படம் என்பதால் இசையும் நல்லா எதிர்பார்க்கலாம்! நம்ம ஏ.ஆர்.ஆர் வேற! பட் எனக்கு அங்கதான் கொஞ்சம் ஏமாற்றம்!
பாடல்களில் மனது லயிக்கும் வண்ணம் பாடல்கள் வரிகளை டாமினேட் செய்யாமல் இசை கூடவே இழையோடி வந்திருக்க வேண்டும் இது போன்ற திரைப்படங்களில்! ஆனால் இங்கே ஏ.ஆர்.ரஹ்மான் கலக்கி இருக்கிறார்! பாடல்கள் வரிகள் முதல் முறை கேட்கும்போது மனதில் பதிய மறுக்கிறது!
கவிஞர் தாமரையின் பாடல்கள். மியூசிக் டாமினேட் செய்யுதே! என்ன செய்ய!
(இந்த விஷயத்தில் இளையராஜா, ஃபாசில் கூட்டணி நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை!)
சிம்பு : நடித்திருக்கிறார்! நிஜமாத்தாங்க! அவரோட பழைய படங்களில் இருந்த துள்ளல், விசுக் விசுக் கென்று காட்டும் விரல் வித்தைகள் மிஸ்ஸிங்க்! நடிப்பு இம்ப்ரூவ் ஆகி இருக்கின்றது! பாரட்டுக்கள்!
விஜய்க்கு ஒரு பூவே உனக்காக போல சிம்புவிற்கு இது திருப்புமுனையாக அமையும் வாய்ப்பு இருக்கிறது!
த்ரிஷா - வழக்கமான துறுதுறுப்பு இல்லாமல் க்யூட் அண்ட் கொயட்டாக வருகிறார்! குடும்பச் சூழ்நிலையைத் தாண்டி காதலுக்காக வெளியே வர இயலாத ஒரு கண்ட்ஸ்ட்ரெயிண்ட் அவருக்கு! செல்ஃப் கண்ஸ்ட்ரெயிண்ட்தான்! ஆனாலும் அதையும் மீறி அவருக்குள்ளும் காதல் தோன்றுகிறது!
கண்களுக்குள் காதலை வைத்துக் கொண்டு அதை வெளியே தெரியாமல் மறைக்கப் படாதபாடு படுகிறார்!
ஆனாலும் சிம்புவுக்கு பார்த்தவுடனே அவரோட மனசுல காதல் தோன்றி, அவரைப் போட்டுத்தாக்கும் அளவுக்கு.... ம்ஹூம் அந்த அளவுக்கு இல்லை. ஜஸ்ட் கியூட் அவ்வளவுதான்! (ஒரு வேளை இளவட்டப் பசங்களுக்கு மனசுல புகுந்து குத்தாட்டம் போடுமோ என்னவோ)
அல்லது சிம்புவோட கண்கள் வழியா பார்க்கணுமோ!
த்ரிஷாவை விரட்டி விரட்டி லவ்வும் சிம்புவும், ஆரம்பத்தில் காதலில் விழுந்தாலும் அதைக் கடைசியில் கை கழுவும் த்ரிஷாவும் என செல்கிறது கதை!
இன்னும் எத்தனை படத்துலதான் பெண்ணின் தகப்பனார்கள் தன் பிணத்தைப் பார்த்துட்டு அந்தப் பையனை கல்யாணம் பண்ணிக்கோன்னு பிளாக் மெயில் பண்ணுவாங்களோ! மாப்பிள்ளைன்னு வந்தாலே ஃபாரின்லே வேலை செய்யுற மாப்பிள்ளைகள் வருவாங்களோ!
நல்ல நல்ல லொக்கேஷன்ஸ்! அருமையான ஃபோட்டோகிராஃபி!
பாடகளில் கதையோடு பொருந்தாத வெளிநாட்டு வாலிபர்கள்/வாலிபிகள் கூட நடனமாடுகிறார்கள்! ஒரு பாட்டில் என்றால் ஓக்கே! எல்லாப் பாடல்களிலுமா?
திரைக்கதை, கிளைமாக்ஸ் எல்லாம் ஓக்கே!
இளவட்டப் பசங்களுக்கு, காதலிக்க ஃபிகர் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு, காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, காதலித்து முடித்தவர்களுக்கு..... திரும்பத் திரும்பப் பார்த்து ஃபீல் ஆகிக் கொள்ள வைக்கும் படம்!
விண்ணைத் தாண்டி வருவாயா? - எ நைஸ் ஃபீலிங்க்ஸ்!
Wednesday, March 10, 2010
விண்ணைத் தாண்டி வருவாயா.....?
பிதற்றியவர் நாமக்கல் சிபி at Wednesday, March 10, 2010 9 பின்னூட்டங்கள்
வகை : விமர்சனம்
Monday, October 05, 2009
திரைவிமர்சனம் : எந்திரன்- தி ரோபோ
படம் வரும் வரும்னு எத்தினி நாளுக்குத்தான் தேவுடு காக்குறது! அதான்! இப்பவே எழுதி வெச்சிட்டேன்! படம் ரிலீசான பிறகும் படிச்சா ஒண்ணியும் பெரிசா வித்தியாசமும் இருக்க்கப்போறதில்லை!
ரோபோ- இயந்திர மனிதன் என்கிற பொருளில் படத்தின் தலைப்பு இருப்பதால் படம் முழுக்க ஒரு ரோபோ (ஜட்ஜ்மெண்ட் ஆர்னால்டு போல ரோபாகவே வருவார் என்றோ அல்லது "என் இனிய இனியந்திரா" தொடரில் வருவது போல சில காட்சிகளுக்காவது "நான் ரனினி நீ ஐஸ்வர்யா, நான் ரஜினி நீ ஐஸ்வர்யா" என்றெல்லாம் தத்துப்பித்தென்று டயலாக் பேசிக்கொண்டோ வருவார் என்றெல்லாம் எதிர்பார்த்து தியேட்டரிலோ/அல்லது திருட்டு டிவிடொ பிளேயர் முன்பொ அமர்ந்திருந்தீர்கள் என்றால் ஐ யாம் வெரி ஸாரு டூ ஸே! அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை!
தமிழ்ச்சினிமா மசாலா டிரெயிலர் கலாச்சாரத்தில் இருந்து சற்றும் விலகாத இன்னுமொரு காஸ்மெடிக் மசாலதான் இதுவும்! டியெடிலர் காட்சிகளில் காண்பிக்கப்படும் பரபரப்பான காட்சிகள் படம் முழுக்க வியாபித்திருக்கும் என்று நினைத்துப் போனால் அந்த டியெயிலர் காட்சிகளிலேயெ இரண்டு படத்தின் நீளம் கருதி கத்தரிக்கப் பட்டிருக்கக் கூடும்!
ஒரு சோத்துக்கு ஒண்ணே முக்கால் பானை பதம் - என்பதே தமிழ்ச்சினிமா விளம்பர யுக்தி! இதே யுக்திதான் ரோபோவும்!
ரோபோ எனப்படும் அரதப் பழசான(இந்தப் படம் ரிலீஸாக்கியிருக்கும் நேரம் என் அண்ணன் மகன் அழகர் கார்த்திக் கூட இந்த டெக்னாலஜியை அரதப் பழசு என்றுதான் சொல்லக் கூடும், இப்போ அவனுக்கு வயசு டிசம்பர் வந்தா 1) இயந்திர மனிதன் கெட் அப் பை மாட்டிக்கொண்டு ஓரிரண்டு காட்சிகளில் வந்து போகிறார். கந்தசாமியில் கோழி வேஷம் போட்ட சீயான் மாதிரி! விளம்பரப் படங்களை பார்த்து நாம் ஏதோ வித்தியாசமான கெட் அப் என்று நம்பி போயி உட்கார்ந்தோம் அல்லவா! அதே கதைதான் இங்கேயும்!
சங்கர் சார்: ரொபாடிக் எஞ்சினியரிங்க் இப்ப ஒண்ணாம் வகுப்பு சிலபஸ்லயே வரப் போகுதாம். பசங்களுக்கு உங்க படத்தை பார்த்தா காமெடியா இருக்கப் போகுது! பசங்க கூட டெக்லாலஜிக்கல் லாஜிக் ஓட்டைகளை விமர்சிக்கப் போகிறார்கள்! என்ன செய்யப் போறீங்களோ? :(
படம் பிரம்மாண்டம் என்று சொல்லப்(விளம்பரப்படுத்தப்)படும் இன்னொரு காரணம் : கதாநாயகி : முன்னால் உலக அழகி ஐஸ்வர்யா ராய்!
நடனக் காட்சிகளில் நளினம். ஜீன்ஸ் போலவே! அதையெ எல்லாப் படத்திலும் பார்த்துகிட்டிருக்க முடியுமா? வித்தியாசமா வில்லி ரோல் கொடுத்தப்ப வேணாம்னுட்டீங்க! அதுக்குப் பழிவாங்கிட்டாங்க பார்த்தீங்களா? உங்களுக்கும் இந்தப் படத்துல ஈக்வெல் ரோல்னு வேற சொன்னாங்க! அதுக்காக தன்னோட ரோல் லெவலை தலைவர் இவ்ளோ மட்டமா குறைச்சிக்குவாருன்னு எதிர்பார்க்கவே இல்லை! உங்களுக்குப் பதிலா ஏதாச்சும் ஒரு மொக்கக துணை நடிகையைப் போட்டிருந்தாலும் ஒண்ணும் வித்தியாசம் இருந்திருக்கப் போறதில்லைன்னு உங்களுக்கு நெசமாவெ புரியலயா தாயி?
ஐஸ்வர்யாவேதான் ஜோடியா வேணும்னு அவங்க கால் ஷீட்டுக்காக்வே காத்திருந்து இப்படியொரு மொக்கை அவசியமா தலவரே! பொண்ணு பொருள் புகழ் இதெல்லாம் நம்ம பின்னாடி வரும்னு எப்பவோ சொன்னீங்களே தலைவா! ஓ! அதெல்லாம் டயலாக்கா! நீங்களா சொன்னதில்லையா! அப்ப சரி!
கதை : என்னாது கதையா? டைரக்டர் அடிக்க வருவாரே! தலைவர் படத்துல வேற என்னங்க எதிர்பார்க்குறீங்க! நாட்டுக்கு நல்ல செய்யற தலைவர்! விஞ்ஞான விபரீங்களை நிகழ்த்தி பணம் பண்ண நினைக்கிற வில்லன்! அவனை நல்ல விதமா திருத்த நினைச்சி வீதிக்கு வந்துடறாரு! ஒரே பாட்டுல எல்லாட் டெக்னாலஜியும் கத்துகிட்டு வில்லனோட ரூட்லயே களத்துல குதிக்கிறாரு! நடுவுல வில்லனோட மாமன் மகள் ஐஸ்வர்யா கூட காதல்! வெளிநாடெல்லாம் போயி டூயட் பாடி புரொடியூசர் வயித்துல கொஞ்சம் புளியயக் கரைச்சிட்டு திரும்ப வந்து வில்லனோட மோதுறாரு!
பாடல்கள்: வைரமுத்து & பா.விஜய்!
கேக்க இனிமையான பாடல்களா இருந்திருக்க வேண்டியது! சங்கர் & ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியாச்சே! பிரம்மாண்டம்னு சொல்லி பின்னியெடுத்திருக்காங்க! பாடல்கள் புரியணும்னா கையோட ஒரு டிக்ஷனரியும் கொண்டு போங்க!
பாவம் வைரமுத்து! பா.விஜய் தற்கால லௌகீகங்கள் புரிஞ்சவர்! சோ நோ வரீஸ்!

நடனம்: ராஜூ சுந்தரம், அதிக வேலையில்லை இவருக்கு! தலைவர் படத்துல டான்ஸா? ஹே ஹே ஹெஹெஹேஹே!

சண்டைப் பயிற்சி : யூயேன் வூ பிங், பேரைச் சொல்றதே சண்டை போடுற மாதிரி இருக்குல்ல! படத்துலயும் அம்புட்டுத்தான்! தலைவருக்குத்தான் இதெல்லாம் சரிப்பட்டு வரதில்லையே! அப்புறம் ஏன் இந்த காமெடி?
ஒளிப்பதிவு ஓகே! சவுண்ட் & சயிண்டிஃபிக் எஃபெக்ட்ஸ் என்ற பெயரில் இம்சையைக் கூட்டி இருக்கிறார்கள்! என்ன கொடுமை சார் இது! நாங்க பாவம்! அழுதுடுவோம்!
பிதற்றியவர் நாமக்கல் சிபி at Monday, October 05, 2009 38 பின்னூட்டங்கள்
வகை : விமர்சனம்