எப்பவாவது எட்டிப்பார்த்து
கவிதைன்னு நினைச்சுவந்து
கருமத்தையா படிச்சிட்டோம்னு
கவலைப் பட்ட
நண்பனுக்கு!
எப்படியெல்லாம் எழுதிவெச்சா
கவிதைன்னு ஒத்துக்குவே
ரூல்ஸு புக்கு இருந்ததுன்னா
அனுப்பிவைப்பா ராசா எனக்கு!
வரி ஒண்ணுக்கு
ரெண்டு வார்த்தை
மடக்கி எழுத
கவிதை வரும்
எனக்கு தெரிஞ்ச
இலக்கணத்தில்
எழுதிப் பிழைப்பை
ஓட்டி வந்தேன்!
கவிதைன்னு எழுதறதெல்லாம்
கருமம்னு சொல்லிப்புட்டா
நாங்க அதை
ஒத்துக்கணுமா?
நம்மலால முடியாது ராசா!
என்னவெல்லாம்
எப்பவெல்லாம்
எழுதணும்னு
எனக்குத் தெரியும்!
உம்ம எழுத்து
எப்பவெல்லாம்னு
முடிவு பண்ண
உனக்கு உரிமையிருக்கு!
எங்க எழுத்து
எப்பன்னெல்லாம்
நாங்களே பார்த்துக்குறோம்!
உனக்கெதுக்கு
ராசா வீண் சிரமம்?
நாங்க எழுதுறதுதான் கவிதை!
நாங்க எழுதுறதுதான் கவுஜை!
நாங்க எழுதுறதுதான் கட்டுரை!
நாங்க எழுதுறதுதான் கதை!
நாங்க எழுதுறதுதான் அரசியல்!
எதை வேணும்னாலும்
எப்ப வேணும்னாலும்
எப்படி வேணும்னாலும்
எழுதிகிட்டேதான் இருப்போம்!
மத்தவங்க சர்டிஃபிகேட்
எங்களுக்கு தேவையில்லை!
எங்களோட சர்டிஃபிகேட்
உங்களுக்கு எதுவுமில்லை!
புரியாதவங்க இங்கன போயி பாருங்க
Showing posts with label எதிர்கவுஜை. Show all posts
Showing posts with label எதிர்கவுஜை. Show all posts
Friday, October 02, 2009
கருமமா, கவிதையா.. உங்கள் சாய்ஸ்!
பிதற்றியவர் நாமக்கல் சிபி at Friday, October 02, 2009 37 பின்னூட்டங்கள்
வகை : எதிர்கவுஜை
Subscribe to:
Posts (Atom)