BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Tuesday, September 29, 2009

பதிவர்கள் தேவை...................!


ரொம்ப நாளா பதிவு எழுதுறதை நிறுத்தினதால புதுசா ஏதாச்சும் எழுதலாம்னு பார்த்தா ஒரே சோம்பேறித்தனமா இருக்கு!

அதனால நான் சொல்லச் சொல்ல தட்டச்சித்* தர பதிவர்கள் யாராச்சும் முன்வந்தீர்கள் எனில் தனிமடலிலோ/பின்னூட்டத்திலோ தெரியப் படுத்தவும்!












*சம்பளம்/தங்குமிடம்/போனஸ்/பி.எஃப் என்று எதுவும் கிடையாது. தன்னார்வப் பதிவர்கள் மட்டுமே வரவேற்கப் படுகிறார்கள்!

Tuesday, September 01, 2009

நாங்கதான் இருக்கம்ல!

நாங்கதான் இருக்கம்ல!
கண்கட்டி வந்து லீவுல இருந்தாலும் ஓசில கொஞ்ச நேரம் நெட்டோட ஒரு கம்ப்யூட்டர் கிடைச்சா இப்படித்தான்!
அண்ணாமலை பார்த்த கையோட அடுத்து திருப்பதிக்கும் பாத யாத்திரையா பாதி தூரமும், ரத யாத்திரையா பாதி தூரமும் போயிட்டு வந்தாச்சு! சாதா சிபி யான நான் மொட்டை சிபியாகவும் ஆயாச்சு! பாத யாத்திரையா போனது நல்ல வித்தியாசமான அனுபவமா இருந்தது! வருஷா வருஷம் போகணும்னு நினைச்சிகிட்டேன்!
நண்பர் சிங்கை நாதன் முதல் கட்ட அறுவை சிகிச்சை முடிஞ்சி நல்ல படியா இருக்காருன்னு தெரிஞ்சிகிட்டேன்! மகிழ்ச்சியா இருந்தது! உலகம் பூரா இருக்குற நம்ம பதிவர்களின் பிரார்த்தனைகளுக்கு கண்டிப்பா பலன் இருக்கும்! அதுதான் கூட்டுப் பிரார்த்தனையின் வலிமை!
அப்பாலிக்கா வேறென்ன? திரும்ப இன்னொரு நாள் ஓசிஸ்டம் கிடைச்சா திரும்ப வரேன்! அதுவரைக்கும் ஒரு டாட்டா!
வர்ட்டா!

Free Website Hosting